கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது

பேச்சுவார்த்தை தோல்வி: கல்வி சாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது

by Bella Dalima 16-03-2018 | 4:39 PM
Colombo (News 1st)  பல்கலைக்கழக தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும் பிரதமர் அலுவலக பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. அதற்கமைய, கல்வி சாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் எட்வர்ட் மல்வத்தகே குறிப்பிட்டார். பிரதமர் அலுவலகத்தில் இன்று முற்பகல் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாமையால் பணிப்பகிஷ்கரிப்பை தொடர்வதற்கு தீர்மானித்ததாக எட்வர்ட் மல்வத்தகே தெரிவித்தார்.