கொள்ளுப்பிட்டி சந்தியில் காலி வீதி மூடப்பட்டுள்ளது

காலி வீதி ஊடாக கொழும்பிலிருந்து வௌியேறும் வழித்தடம் கொள்ளுப்பிட்டி சந்தியுடன் மூடப்பட்டுள்ளது

by Bella Dalima 16-03-2018 | 4:25 PM
Colombo (News 1st)  காலி வீதி ஊடாக கொழும்பிலிருந்து வௌியேறும் வழித்தடம், கொள்ளுப்பிட்டி சந்தியுடன் மூடப்பட்டுள்ளது. அரச நில அளவையாளர்கள் சங்கத்தினரின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கொழும்பிற்குள் பிரவேசிப்பதற்கான ஒருவழி பாதை மாத்திரம் கொள்ளுப்பிட்டி சந்தியில் திறக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். இதன் காரணமாக கொழும்பிலிருந்து வௌியேறும் வாகனங்கள் காலி முகத்திடல் சுற்றுவட்டத்தில் திரும்பி அக்பார் வீதியூடாக கொம்பனி வீதிக்கு சென்று பயணிக்க முடியும் என பொலிஸார் குறிப்பிட்டனர்.