இலங்கை மீனவர்கள் ஐவர் இந்தியாவில் கைது

இலங்கை மீனவர்கள் ஐவர் இந்தியாவில் கைது

by Bella Dalima 16-03-2018 | 4:55 PM
Colombo (News 1st) கடல் எல்லையை மீறி சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் ஐவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலையிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேவேந்திரமுனையை சேர்ந்த மீனவர்களே இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டது. இதேவேளை, போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய இலங்கைப் பிரஜைகள் நால்வர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் சுட்டிக்காட்டியது. இந்நிலையில், வானிலை தொடர்பான அறிவித்தலையும் மீறி, கடந்த 12 ஆம் திகதி முல்லைத்தீவு நாயாறு பகுதியில் கடற்றொழிலுக்கு சென்ற மீனவர்கள் தொடர்பில் இதுவரை தகவல் ஏதும் கிடைக்கவில்லையென திணைக்கம் குறிப்பிட்டது. கடற்படையின் டோரா படகுகளை ஈடுபடுத்தி, மீனவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.