COLOMBO (News 1st) - பேஸ்புக் மீதான தடையை உடனடியாக தளர்த்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டிற்கு வருகை தந்துள்ள பேஸ்புக் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் ஊடாக குரோதத்தை பரப்பும் மற்றும் வன்முறையை தூண்டும் பதிவுகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பங்களை தடுப்பதற்கு பேஸ்புக் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.