16 ஆவது நாளாக பணிப்பகிஷ்கரிப்பு; மாணவர்கள் சிரமம் 

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் தொடர் பணிப்பகிஷ்கரிப்பினால் சிரமங்களை எதிர்கொண்டுள்ள மாணவர்கள்

by Bella Dalima 15-03-2018 | 8:07 PM
Colombo (News 1s)  16 ஆவது நாளாகத் தொடரும் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பல்கலைக்கழக செயற்பாடுகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் உயர் கல்வியைத் தொடரும் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பல்கலைக்கழக பௌதீக வளங்கள் தொடர்பிலான செயற்பாடுகள், கால அட்டவணை தயாரித்தல், வினாத்தாள் அச்சிடுதல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மாதாந்த நிலுவைக் கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வி சாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல்கலைக்கழகங்களின் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதுடன், பல பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பிற்கு மாணவர்களைத் தெரிவு செய்யும் தேர்வுகளும் பிற்போடப்பட்டுள்ளன.