நவாஸ் ஷெரீஃப் வீடருகே மனித வெடிகுண்டுத் தாக்குதல்

நவாஸ் ஷெரீஃப் வீடருகே மனித வெடிகுண்டுத் தாக்குதல்: 9 பேர் பலி

by Bella Dalima 15-03-2018 | 4:06 PM
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் வீட்டின் அருகே நடத்தப்பட்ட மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 9 பேர் பலியாகியுள்ளனர். 25-இற்கும் அதிகமானோர் இதன்போது காயமடைந்துள்ளனர். பாதுகாப்புப் படையினரை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. லாகூரில் நவாஸ் ஷெரீஃப் குடும்பத்தினர் வசிக்கும் பகுதிக்கு சில கிலோமீட்டர் தொலைவில் பொலிஸ் சோதனைச் சாவடி உள்ளது. அங்கு நேற்று (14) சென்றிருந்த இளைஞர் ஒருவர், திடீரென தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். சக்திவாய்ந்த அந்த குண்டு வெடித்ததில் காவல் ஆய்வாளர்கள் இருவர், 3 பொலிஸார் உட்பட 9 பேர் பலியாகினர். காயமடைந்த 25 பேர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.