கடந்த ஆண்டு ஆடை ஏற்றுமதி மூலம் 480 கோடி வருமானம்

கடந்த ஆண்டு ஆடை ஏற்றுமதி மூலம் 480 கோடி வருமானம்

by Staff Writer 15-03-2018 | 9:06 AM
COLOMBO (News 1st) - கடந்த வருடம் இலங்கையில் தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதி மூலம் 480 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும் 2018 ஆம் ஆண்டில் இதுவரை 45 கோடி ரூபா ஆடை ஏற்றுமதி மூலம் கிடைத்துள்ளதாகவும் கூட்டு ஆடை உற்பத்தி சங்க அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வருடம் ஆடை உற்பத்தி மீள் ஏற்றுமதியின் மூலம் கணிசமான வாருவாயை பெறக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் தைக்கப்பட்ட ஆடைகள் மற்றும் துணி வகைகள் தொடர்பான கண்காட்சியின் ஆரம்ப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.