இந்திய பிர​ஜைகள் 23 பேர்  நாடு கடத்தல்

இந்திய பிர​ஜைகள் 23 பேர் நாடு கடத்தல்

by Staff Writer 15-03-2018 | 8:47 AM
COLOMBO (News 1st) - கொழும்பில் கைது செய்யப்பட்ட 23 இந்திய பிரஜைகளும் நாடு கடத்தப்படவுள்ளனர். விசாரணைகளின் பின்னர் அவர்கள் இன்று நாடுகடத்தப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது கொழும்பின் பல பகுதிகளிலிருந்து இந்திய பிரஜைகள் 23 பேரும் நேற்று (14) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். ஆடை வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலா வீசாவில் நாட்டிற்கு வருகை தந்து சட்டவிரோதமாக தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.youtube.com/watch?v=v0ZFkzyd4Ac