அர்ஜுன் மகேந்திரனுக்கு பிடியாணை

அர்ஜுன் மகேந்திரனுக்கு பிடியாணை

by Staff Writer 15-03-2018 | 12:47 PM
COLOMBO (News 1st) - மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளார். சட்ட மாஅதிபர் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுவதற்கு காலக்கெடு வழங்கப்பட்ட போதிலும் அவர் ஆஜராகாமையால் பிடியாணை பிறப்பிக்குமாறு சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிஷிட்ட ஜெனரல் யசந்த கோத்தாகொட நீதவானிடம் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கோட்டை நீதவான் அர்ஜுன மகேந்திரனை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பித்துள்ளார். மத்திய வங்கியில் இடம்பெற்ற முறிகள் மோசடி தொடர்பிலேயே முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.youtube.com/watch?v=lmgM8gBwccQ