by Bella Dalima 14-03-2018 | 5:41 PM
Colombo (News 1st)
சிறுபோகத்தில் இருந்து விவசாயிகளுக்கு 50 கிலோகிராம் எடையுடைய ஒரு மூடை உரத்தை 500 ரூபாவுக்கு வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலதிக பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஒரு மூடை உரத்தை 1500 ரூபாவுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை அடுத்த வாரத்தில் அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது சந்தையில் இருப்பில் உள்ள உரத்தைக் கணக்கிட்டு அதற்கு அரசாங்கம் மானியத்தை வழங்கவுள்ளதாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசு இதற்காக 35 பில்லியன் ரூபாவை செலவிடவுள்ளது.