சீதுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்

 சீதுவ பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்

by Bella Dalima 14-03-2018 | 5:16 PM
Colombo (News 1st)  25 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சீதுவ பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதம நீதவான் லால் ரணசிங்க முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் சந்தேகநபரான பொலிஸ் பொறுப்பதிகாரி நேற்று (13) கைது செய்யப்பட்டார். சீதுவ பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடொன்றை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது, சந்தேகநபர் ஒருவரிடமிருந்து பொலிஸ் பொறுப்பதிகாரி இலஞ்சம் பெற்றுக்கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.