அரச நிலஅளவை திணைக்கள உத்தியோகத்தர்கள் பகிஷ்கரிப்பு

அரச நில அளவை திணைக்கள உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

by Staff Writer 14-03-2018 | 10:49 AM
COLOMBO (News 1st) - அரச நில அளவை திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தினர் இன்று முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். நில அளவை திணைக்களத்தை தனியார் துறையிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமது எதிர்ப்பையும் மீறி அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பிலான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாக அரச நில அளவை திணைக்களத்தின் தலைவர் துமிந்த உடகொட தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டு தொடர்பில் நில அளவையாளர் சீ.எம்.சீ.உதயகாந்தவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது. தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தி மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.