முல்லைத்தீவில் கடலுக்குச்சென்ற மீனவர்களை காணவில்லை

முல்லைத்தீவில் 3 மீனவர்களுடன் பயணித்த படகொன்று காணாமற்போயுள்ளது

by Staff Writer 13-03-2018 | 9:28 AM
COLOMBO (News 1st) - முல்லைத்தீவு நாயாறு பகுதியில் மூன்று மீனவர்களுடன் பயணித்த படகொன்று காணாமற் போயுள்ளது. நேற்று கடற்றொழிலுக்காக சென்ற மீனவர்களே காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிலாபம் பங்கதெனிய பகுதியைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு காணாமற்போயுள்ளனர். காணாமற்போன மீனவர்களை தேடும் பணிகளில் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.