by Staff Writer 13-03-2018 | 9:28 AM
COLOMBO (News 1st) - முல்லைத்தீவு நாயாறு பகுதியில் மூன்று மீனவர்களுடன் பயணித்த படகொன்று காணாமற் போயுள்ளது.
நேற்று கடற்றொழிலுக்காக சென்ற மீனவர்களே காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம் பங்கதெனிய பகுதியைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு காணாமற்போயுள்ளனர்.
காணாமற்போன மீனவர்களை தேடும் பணிகளில் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.