கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் கொலை

முகத்துவாரத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

by Staff Writer 13-03-2018 | 1:06 PM
COLOMBO (News 1st) - கொழும்பு முகத்துவாரம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்கப்பட்ட இளைஞன் பலத்த காயங்களுடன், தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். கொட்டாஞ்சேனையை சேர்த்த 25 வயதான இளைஞனே தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளங் காணப்பட்டுள்ளார். சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதுடன் பொலிஸார், விசாரணைளை ஆரம்பித்துள்ளார்.  

ஏனைய செய்திகள்