ஜனாதிபதி இன்று ஜப்பான் பேரரரை சந்திக்கவுள்ளார்

ஜனாதிபதி இன்று ஜப்பான் பேரரசரை சந்திக்கவுள்ளார்

by Staff Writer 13-03-2018 | 8:53 AM
COLOMBO (News 1st) - உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பானுக்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று ஜப்பான் பேரரசர் அகிஹிட்டோவை சந்திக்கவுள்ளார். ஜனாதிபதி , நாளைய தினம் ஜப்பான் பிரதமரையும், சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தவது தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்படவுள்ளது. சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவையை மேம்படுத்தும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் மற்றும் ஜப்பான் ஒத்துழைப்பு முகவர் அமைப்பு ஆகிவற்றுக்கிடையில் யென்கடன் உடன்படிக்கையொன்றும் இந்த விஜயத்தின் போது கைச்சாத்திடப்படவுள்ளது. ஜப்பான் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டமொன்றிலும் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஜப்பானில் வசிக்கும் இலங்கை பிரஜைகளையும் சந்திக்கவுள்ளார்.