by Staff Writer 12-03-2018 | 12:16 PM
COLOMBO (News 1st) - பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் பேஸ்புக் கணக்குகள் வழமைக்கு திரும்புமா என தொலைத் இதாடர்பு ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவிடம் நியூஸ்பெஸ்ட் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
உரிய நேரத்தில் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.