இரண்டாவது வெற்றியை நோக்கி இலங்கை, இந்திய அணிகள்

சுதந்திரக்கிண்ண கிரிக்கெட் தொடர்: இரண்டாவது வெற்றியை நோக்கி இலங்கை, இந்திய அணிகள்

by Staff Writer 12-03-2018 | 12:59 PM
COLOMBO (News 1st) - சுதந்திரக்கிண்ண முக்கோண கிரிக்கெட் தொடரில் , இலங்கை அணியுடனான இன்றையப் போட்டியில் பொறுப்புணர்ந்து விளையாட எதிர்ப்பார்த்துள்ளதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜெயதேவ் உனாட்கட் கூறுகிறார். சுதந்திரக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்றையப் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொழும்பு ஆர்.பிரேதமதாஸ மைதானத்தில் மின்னொளியில் நடைபெறவுள்ள இந்தப்போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. சுதந்திரக்கிண்ண கிரிக்கெட் தொடரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பங்களாதேஷுடனான போட்டியில் தாமதமாக பந்து வீசியமைக்காக இலங்கை அணித்தலைவரான தினேஷ் சந்திமாலுக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதன்காரணமாக இன்றைய போட்டியை சகலதுறை வீரரான திசர பெரேரா வழிநடத்தவுள்ளார்.