நாளை 9 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பை அண்மித்த சில பகுதிகளில் நாளை 9 மணித்தியால நீர்வெட்டு

by Staff Writer 12-03-2018 | 12:24 PM
COLOMBO (News 1st) - கொழும்பை அண்மித்த சில பகுதிகளில் நாளை 9 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. களனி, பியகம, பேலியகொட, மற்றும் வத்தளை நகர சபை மற்றும் பிரதச சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை, 9 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. திருத்தப்ணிகளுக்காக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ​மேலும் தெரிவித்துள்ளது.