மரக்கறி விலைகளில் வீழ்ச்சி

மரக்கறி விலைகளில் வீழ்ச்சி

by Staff Writer 11-03-2018 | 4:30 PM
COLOMBO (News 1st) - எதிர்வரும் காலங்களில் அரிசி மற்றும் மரக்கறிகளின் விலைகள் குறைவடையும் சாத்தியமுள்ளதாக ஹெக்டர் கொப்பாகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 7 மாதங்களுக்குப் போதுமான நெல் அறுவடை தற்போது கிடைத்துள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. யாழ்ப்பாணம், தம்புத்தேகம, புத்தளம் ஆகிய பகுதிகளில் இருந்து மரக்கறி கிடைப்பதால், எதிர்காலத்தில் மரக்கறியின் விலை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக ஹெக்டர் கொப்பாகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் கூறியுள்ளது. இதேவேளை சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் 10 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக மெனிங் சந்தையின் செயலாளர் காமினி ஹந்துன்கே தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதத்திற்கு பின்னர் சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.