by Staff Writer 11-03-2018 | 3:01 PM
COLOMBO (News 1st) - திருகோணமலை நிலாவௌி பெரியகுளத்தில் மூழ்கி ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படகொன்றில் பயணித்த ஐவருமே நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களில் 4 சிறுவர்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அப்பகுதியிலுள்ள பூப்பறிக்கச் சென்ற போதே இவர்கள் இந்த அனர்தத்தை எதிர்நோக்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நிலாவௌி 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலங்கள் திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
https://www.youtube.com/watch?v=l3Lc0Xuhkoo