உணவு ஒவ்வாமையினால் 110பேர் வைத்தியசாலையில் அனுமதி

ஊர்காவற்துறையில் உணவு ஒவ்வாமை காரணமாக 110 பேர் வைத்தியசாலையில் அனுமதி

by Staff Writer 11-03-2018 | 3:15 PM
COLOMBO (News 1st ) - உணவு ஒவ்வாமை காரணமாக சுகயீனமடைந்த 110 பேர் ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மத வழிபாட்டு நிகழ்வொன்றின் போது உணவு உட்கொண்டதன் பின்னர் இவர்கள் திடீரென சுகயீனமடைந்துள்ளனர். வைத்தியசாலையில் 110 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். அவர்களின் உடல் நிலை தேறி வருவதாகவும் அவர் கூறினார். இந்த சம்பவத்தை அடுத்து அனுமதிக்கப்பட்ட மேலும் சிலர் சிகிச்சையின் பின்னர் வைத்தியாலையில் இருந்து வௌியேறியுள்ளனர். https://www.youtube.com/watch?v=1mZXSl1C3Fs