ஒப்பனைப் பொருட்களை ஒழுங்குபடுத்தத் தீர்மானம்

ஒப்பனைப் பொருட்களை இன்று முதல் ஒழுங்குபடுத்தத் தீர்மானம்

by Bella Dalima 10-03-2018 | 6:12 PM
Colombo (News 1st)   நாட்டில் உற்பத்தியாகும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் ஒப்பனைப் பொருட்களை இன்று முதல் ஒழுங்குபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் அனுமதியின்றி ஒப்பனைப் பொருட்களை உற்பத்தி செய்யவோ, இறக்குமதி செய்யவோ அல்லது விநியோகிக்கவோ முடியாது என அதிகார சபையின் பிரதான நிறைவேற்று அதிகாரி டொக்டர் கமல் ஜயசிங்க குறிப்பிட்டார். இந்த அறிவித்தலை மீறி செயற்படும் ஔடத நிறுவனங்களில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.