by Bella Dalima 10-03-2018 | 4:50 PM
மொரிஷியஸ் ஜனாதிபதி அமீனா குரிப் ஃபாகிம் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதை அடுத்து, அவர் பதவி விலகவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
அடுத்த வாரம் நடைபெறவுள்ள மொரிஷியஸ் நாட்டின் 50 ஆவது ஆண்டு சுதந்திர தின நிகழ்வுகளின் பின்னர் அவர் பதவி விலகவுள்ளார்.
தொண்டு நிறுவனங்கள் வழங்கிய நிதி மூலம் தனிப்பட்ட பொருட்கொள்வனவில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.