by Bella Dalima 10-03-2018 | 3:13 PM
Colombo (News 1st)
பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு நாரஹென்பிட்டி பகுதியில் நேற்றிரவு (09) இடம்பெற்ற விபத்தின் பின்னர், இரண்டு இளைஞர்களுக்கு துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுத்து, தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் ரமித் ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
கைது செய்யப்பட்டுள்ள ரமித் ரம்புக்வெல்லவை கொழும்பு புதுக்கடை இலக்கம் 3 நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
நாரஹென்பிட்டி பொலிஸார் சம்பவம் தொடர்பில மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.