கண்டி மோதல்: முறைப்பாடுகளுக்கு தொலைபேசி இலக்கங்கள்

கண்டி மோதலுடன் தொடர்புடைய 146 பேர் கைது; முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

by Bella Dalima 10-03-2018 | 8:30 PM
Colombo (News 1st) கண்டியில் ஏற்பட்ட மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய 146 பேர் பொலிஸாரால் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, வன்முறையுடன் தொடர்புடையவர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பில் தகவல்களை வழங்க ஏதுவாக பொலிஸ் தலைமையகத்தினால் விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவின் ஊடாக பெறப்படும் தகவல்கள் ஆராயப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு அனுப்பி வைக்கப்படும் என பொலிஸ் ஊடகப் ​பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார். 011 302 48 92 , 011 302 48 83 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மூலம் பொதுமக்கள் தகவல்களை வழங்க முடியும். [email protected] என்ற மின்னஞ்சல் மூலமும் தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.