சட்டம், ஒழுங்கு அமைச்சரின் பொறுப்பு குறித்து சாலி

கண்டி சம்பவத்துடன் தொடர்புடைய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அசாத் சாலி கோரிக்கை

by Bella Dalima 09-03-2018 | 7:37 PM
Colombo (News 1st)  கண்டி சம்பவத்துடன் தொடர்புடைய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவது புதிய சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சரின் பொறுப்பு என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக கடமைகளை ஆரம்பித்துள்ள அமைச்சர் ரஞ்ஜித் மத்துமபண்டாரவிற்கு, கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள அசாத் சாலி, கண்டி சம்பவம் தொடர்பில் அதிகக் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார். தொடர்புடைய நபர்களை தராதரம் பாராது கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அசாத் சாலி அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.