நாட்டில் இன்று முதல் பலத்த மழை பெய்யக்கூடும்

நாட்டில் இன்று முதல் பலத்த மழை பெய்யக்கூடும்

by Bella Dalima 09-03-2018 | 4:07 PM
Colombo (News 1st) நாட்டில் இன்று முதல் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கடும் காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. சில கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வரை கடும் காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.