நடிக்க வந்த போது பலரும் கேலி செய்தார்கள்: டாப்சி

நடிக்க வந்த போது பலரும் கேலி செய்தார்கள்: டாப்சி

by Bella Dalima 09-03-2018 | 7:13 PM
தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ள டாப்சி, தான் நடிக்க வந்த போது தன்னைப் பலரும் கேலி செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ், தெலுங்கில் நடித்துக்கொண்டிருந்த டாப்சி இந்திப் பட உலகிற்கு சென்றார். தற்போது அங்கு முன்னணி நடிகையாகவுள்ளார். வித்தியாசமான கதைகளில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தனது சினிமா அனுபவம் பற்றி டாப்சி ஒரு நேர்காணலில் தெரிவித்திருப்பதாவது,
நான் ஆரம்பத்தில் சினிமாவிற்கு நடிக்க வந்த போது இயக்குனர்கள் சின்னச் சின்ன காரணங்களுக்காக என்னை நிராகரித்து இருக்கிறார்கள். நீ அழகாக இல்லை. கவர்ச்சியாக இல்லை. நீ நடிகையாக லாயக்கு இல்லாதவள் என்று கேலி செய்தார்கள். நீ பெரிய ஆளின் மகள் இல்லை. உன் பெயரை வைத்து வியாபாரம் செய்ய முடியாது என்றும் சொல்லி அவமதித்தார்கள். நான் நடிக்க விருப்பப்பட்டு சினிமாவிற்கு வந்தேன். முன்பு சினிமாத் துறையின் செயற்பாடுகள் எனக்கு தெரியாது. இப்போது அதை தெரிந்து கொண்டிருக்கிறேன். திரை உலகில் என் மதிப்பை உயர்த்துவது எப்படி என்று யோசிக்கிறேன். ஒன்றுமே தெரியாமல் இருந்த நான் இவ்வளவு கற்றுக்கொண்டதே பெரிய வி‌டயம். என் தங்கையை என்னைப்போல் கஷ்டப்பட விடமாட்டேன்.