by Bella Dalima 09-03-2018 | 3:26 PM
Colombo (News 1st)
இரத்மலானை - கல்தேமுவல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
காரில் பயணித்த அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கல்கிசை பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, கொட்டாஞ்சேனை - ஹெட்டியாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இருவர் தொடர்ந்தும் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.