வன்முறைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்

வன்முறைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் - சர்வதேச சமூகம்

by Staff Writer 08-03-2018 | 8:45 AM
COLOMBO (News 1st) - வன்முறைகளுடன் தொடர்புடைய அண்மைய சம்பவங்களை, இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இவற்றுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ஐ.நா வலியுறுத்தியுள்ளது. அத்துடன் சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ள ஐ.நா, அனைவரினதும் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, மனித உரிமைகள் சட்டம் மற்றும் சமத்துவம் ஆகியன சமாதானத்திற்கு அத்தியாவசியமானவை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. பிரிவினைவாத வன்முறைகளை தோற்றுவித்தவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இதேவேளை, அண்மைய வன்முறைகள் தொடர்பில் இலங்கையிலுள்ள அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.  

ஏனைய செய்திகள்