வடக்கின் சமர் ஆரம்பம்

வடக்கின் சமர் ஆரம்பம்

by Staff Writer 08-03-2018 | 11:41 AM
COLOMBO (News 1st)- வடக்கின் சமர் என வர்ணிக்கப்படுகின்ற யாழ். மத்தியக் கல்லூரி மற்றும் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான 112 ஆவது வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமானது. உலகில் பாடசாலைகள் மத்தியில் நடத்தப்படும் பழைமை வாய்ந்த கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றாக வடக்கின் சமர் காணப்படுகின்றது. யாழ். மத்தியக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் யாழ். மத்தியக் கல்லூரி அணியை எஸ்.தசோபன் வழிநடத்துகிறார். சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியின் தலைவராக வி. ஜதூஷன் திகழ்வதோடு அவர் இந்தப் பருவ காலத்துக்கான பாடசாலை மட்டப் போட்டியில் சதமடித்த வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். இரு கல்லூரி அணிகளுக்கும் இடையிலான இவ்வருட மாபெறும் கிரிக்கெட் போட்டி பழைய மாணவர்களின் தலைமையில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ். மத்தியக்கல்லூரி அணித்தலைவர் எஸ்.தசோபன் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார். அதன்படி போட்டியில் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.