முஸ்லிம்கள் மீதான வன்முறை: இந்து மாமன்றம் கண்டனம்

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் கண்டனம்

by Bella Dalima 08-03-2018 | 8:33 PM
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு இந்து மாமன்றம் கண்டனம் கண்டி உள்ளிட்ட சில பிரதேசங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மத வன்முறைகளை அகில இலங்கை இந்து மாமன்றம் அறிக்கை ஒன்றின் மூலம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இன, மதத் துவேச பாரபட்ச நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தை எவருக்கும் வழங்கக்கூடாது என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இன, மத, மொழி வேறுபாடு காட்டும் தீய எண்ணத்துடன் எவரையும் பாரபட்சமாக நடத்துவதற்கு அரச அதிகாரத்தைப் பயன்படுத்த எவருக்கும் அனுமதி வழங்கக்கூடாது எனவும் இந்து மாமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. சகல மக்களும் சட்டத்தின் முன் சமமானவர்கள் எனவும் சகலருக்கும் சட்டத்தின் கீழ் சம பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.