கண்டியில் மாலை 6 மணி முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம்

கண்டியில் மாலை 6 மணி முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது

by Bella Dalima 08-03-2018 | 3:48 PM
Colombo (News 1st)  கண்டி நிர்வாக மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் 12 மணித்தியாலத்திற்கு ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கண்டி நிர்வாக மாவட்டத்தில் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தை இன்று முற்பகல் 10 மணிக்கு தளர்த்தப்பட்டது. இந்நிலையில், மீண்டும் இன்று மாலை 6 மணியிலிருந்து நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் வகையில், மக்களின் வேண்டுகோளைக் கருத்திற்கொண்டு இன்று காலை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருந்தது.  

ஏனைய செய்திகள்