பல்கலைக்கழகதொழிற்சங்க சம்மேளனம் பணிப்பகிஷ்கரிப்பு

பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம் தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பு

by Staff Writer 07-03-2018 | 7:16 AM
COLOMBO (News 1st) - இதுவரையில் முறையான தீர்வு வழங்கப்படாத நிலையில் தமது போராட்டத்தை எட்டாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நேற்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னிலையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். சம்பள உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த மாதம் 28 ஆம் திகதி முதல் பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றது. இது தொடர்பில் இன்று பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார். https://www.youtube.com/watch?v=gNMVyH_ULYk