பத்தனையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

பத்தனையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்பு

by Staff Writer 07-03-2018 | 1:02 PM
COLOMBO (News 1st) - பத்தனை கிரேக்லி தோட்டத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிரேக்லி தோட்ட தொழிற்சாலையில் உதவி களஉத்தியோகத்தராக பணியாற்றி வந்த 38 வயதான ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று காலை கடமைக்குச் சென்றவர் இரவாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரை தேடும் முயற்சியில் ஈடிபட்டுள்ளனர். இதன்போது காயங்களுடன் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திம்புள்ளை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் இன்று நடைபெறவுள்ளது. https://www.youtube.com/watch?v=kYK3TtCEXag