நன்னீர் மீன், நீர்வாழ் தாவர வளர்ப்பிற்கான பயிற்சி

நன்னீர் மீன், நீர்வாழ் தாவரங்கள் வளர்ப்பு தொடர்பில் விசேட பயிற்சித் திட்டம்

by Bella Dalima 07-03-2018 | 4:14 PM
Colombo (News 1st) அதிக வருமானம் ஈட்டக்கூடிய நன்னீர் மீன் மற்றும் நீர்வாழ் தாவரங்களின் வளர்ப்பு தொடர்பில் விசேட பயிற்சித் திட்டமொன்று நாரா (NARA) நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினூடாக பயிற்சி பெறும் 43 பேருக்கான நன்னீர் மீன் மற்றும் நீர்வாழ் தாவரங்களின் வளர்ப்பிற்கான தொழில்நுட்ப உபகரணங்களை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக நாரா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் நன்னீர் மீன் மற்றும் நீர்வாழ் தாவரங்களுக்கு சர்வதேச சந்தையில் அதிகக் கேள்வி நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.