இரு தரப்பினரும் சிந்தித்து செயற்பட வேண்டும்

சிங்கள, முஸ்லிம் தரப்பினர் இருவரும் சிந்தித்து செயற்பட வேண்டும்: பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி

by Bella Dalima 07-03-2018 | 10:18 PM
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி கலந்துகொண்டு கண்டி மாவட்டம் உள்ளிட்ட நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் கருத்துத் தெரிவித்தார். பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்ததாவது,
கண்டி பாரிய பரப்பளவைக் கொண்ட பிரதேசமாகும். அங்கு அனைத்து இடங்களிலும் படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்றிரவு இரண்டு சம்பவங்களே இடம்பெற்றன. அந்த இரண்டு சம்பவங்களும் இடம்பெற்று சிறிது நேரத்திலேயே இராணுவத்தினர் அங்கு சென்று தமது கடமைகளை முன்னெடுத்தனர். இன்று காலை சில இடங்களில் ஏற்பட்ட நிலைமை அதனைவிட சற்று மாறுபட்டது. அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றபோது அவர்களும் பதிலுக்கு செயற்படுகின்றனர். இதனைக் குறைப்பது தொடர்பிலேயே தற்போது பேச வேண்டும். குறைப்பதாக இருந்தால், சிங்கள மற்றும் முஸ்லிம் இரு தரப்பினரும் சிந்தித்து செயற்பட வேண்டும்.
என குறிப்பிட்டார். மேலதிகத் தகவல்களை காணொளியில் காண்க...