by Staff Writer 07-03-2018 | 1:47 PM
COLOMBO (News 1st) - கண்டி நிர்வாக மாவட்டத்திலுள்ள சகல அரச பாடசாலைகளுக்கும் மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலை கல்வி அமைச்சு விடுத்துள்ளது.
கண்டி நிர்வாக மாவட்டத்தில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமையை அடுத்து இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.