பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

by Staff Writer 06-03-2018 | 6:42 AM
COLOMBO (News 1st) - சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று பிற்பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் ஆரம்பமாகவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை தயாரித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரால் கையொப்பமிட்ட பின்னர் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றிணைந்த எதிர்கட்சியிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளதாகவும் செய்தியாளர் தெரிவித்தார்.