தொழில்நுட்பக்கோளாறு காரணமாக விமான பயணங்கள் தாமதம்

தொழில்நுட்பக் கோளாறே விமான பயணங்களின் தாமதத்திற்கு காரணம்

by Staff Writer 06-03-2018 | 9:17 AM
COLOMBO (News 1st) - ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான 04 விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே விமானப் பயணங்களில் தாமதம் ஏற்பட்டதாக அரச தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சிற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தமது அமைச்சின் மூலமாக விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க இந்த அறிக்கை ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் நிர்வாகத்தினால் வழங்கப்பட்டுள்ளதாக அரச தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவாவிதாரன தெரிவித்துள்ளார். தொழில்நுட்பக் கோளாறுகளுக்குள்ளாகிய 04 விமானங்களுள் இரண்டை திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தினமொன்றில் ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் விமானப் பயணங்கள் தாமதமடைந்திருந்தமை காரணமாக பயணிகள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.