பாதுகாப்பற்ற நிலையைத் தவிர்ப்பதற்கே அவசரகாலநிலை

திருப்தியற்ற பாதுகாப்பு நிலையைத் தவிர்ப்பதற்காகவே அவசரகால நிலை பிரகடனம்: ஜனாதிபதி ஊடகப்பிரிவு

by Bella Dalima 06-03-2018 | 3:54 PM
Colombo (News 1st)  திருப்தியற்ற பாதுகாப்பு நிலைமையைத் தவிர்ப்பதற்காக அவசரகால நிலை பிரகடனம்: ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு நாட்டின் ஒரு சில பகுதிகளில் நிலவும் திருப்தியற்ற பாதுகாப்பு நிலைமையைத் தவிர்ப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. குற்றவாளிகள் தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக, பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினரை வலுப்பபடுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் உத்தியோகப்பூர்வ ட்விட்டர் கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.  
 

ஏனைய செய்திகள்