சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் அதிக முறைப்பாடுகள்

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் அதிக முறைப்பாடுகள்

by Staff Writer 06-03-2018 | 7:20 AM
COLOMBO (News 1st) - சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 1919 என்ற இலக்கத்திற்கு அதிகளவு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கூறியுள்ளது. அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி மிரினிடி லிவேரா இதனைத் தெரிவித்துள்ளார். முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு அதிகாரிகளை பயிற்சி வழங்கி தயார் படுத்துவதற்கு விசேட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த தினத்தில் சிலாபத்தில் 09 வயதுடைய சிறுவன் ஒருவன் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையை தொடர்ந்து கிடை க்கும் முறைப்பாடுகள் அதிகரித்து காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.