Colombo (News 1st)
ஏறாவூர் - தாமரைக்கேணி வீட்டுத்திட்டத்தினைச் சேர்ந்த மாணவர் ஒருவர் காணாமற்போயுள்ளார்.
ஏறாவூர் - மிச்சிநகர், தாமரைக்கேணி வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் 13 வயதுடைய மாணவர் ஒருவர் காணாமற்போயுள்ளமை தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாணவர் தாமரைக்கேணி ஸாஹிர் மௌலான வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி பயின்று வந்தார்.
அவர் ஏறாவூர் குடியிருப்பு பிரதேசத்திலுள்ள வீடொன்றில் துவிச்சக்கரவண்டியினை நிறுத்தி விட்டு பஸ்ஸில் ஏறிச்சென்றதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
காணாமற்போயுள்ள மாணவரைத் தேடும் நடவடிக்கைக்காக காத்தான்குடிக்கு மூன்று பொலிஸ் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.