சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியவர் கைது

ஹபராதுவையில் 5 சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர் கைது

by Staff Writer 05-03-2018 | 4:36 PM
COLOMBO (News 1st) - ஹபராதுவ சிறுவர் இல்லத்தில் 5 சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவர் இல்லத்தில் பணிபுரிந்த 53 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 11 வயதான இரண்டு சிறுமிகளும், 15 வயதான இரண்டு சிறுமிகளும், 13 வயதான சிறுமியொருவருமே துஷ்பிரயோகப்படுத்தப்பட்டுள்ளனர். சந்தேகநபரை இன்று காலி மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

ஏனைய செய்திகள்