பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவு

திகன சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

by Staff Writer 05-03-2018 | 5:36 PM
COLOMBO (News 1st) - கண்டி திகன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பாதுகாப்பு தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார். பிரதேச மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான விசேட பாதுகாப்பு திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ​பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பொறுப்புடன் செயற்படுமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ள ஜனாதிபதி, பிரதேசத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அறிவித்துள்ளார். https://www.youtube.com/watch?v=1apoSJAIwiw  

ஏனைய செய்திகள்