by Staff Writer 05-03-2018 | 8:05 PM
COLOMBO (News 1st) - சீமெந்தின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கிணங்க, சீமெந்து மூடையொன்றின் விலை 930 இலிருந்து 960 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களை நாட்டிற்கு கொண்டுவர அதிக செலவீனங்கள் ஏற்படுவதாகவும், இதனை கருத்திற்கொண்டு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய விலையை அதிகரிப்பதற்கான அனுமதியை வழங்கியதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
https://www.youtube.com/watch?v=dUNPmblQADU