இந்திய அணி நாட்டை வந்தடைந்தது

இந்திய அணி நாட்டை வந்தடைந்தது

by Staff Writer 05-03-2018 | 6:31 PM
COLOMBO (News 1st) - சுதந்திரக் கிண்ண முக்கோண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய அணி நாட்டை வந்தடைந்துள்ளது. இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்கும் சுதந்திர கிண்ண முக்கோண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நாளை (06) ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தத் தொடரை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்தத் தொடரில் இலங்கை அணியை வழிநடத்தும் வாய்ப்பை தினேஷ் சந்திமால் பெற்றுள்ளார். உபாதைக்குள்ளான அணித்தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் இன்னும் பூரண குணமடையாததே அதற்குக் காரணம். பங்களாதேஷில் நடைபெற்ற முக்கோண கிரிக்கெட் தொடரின் போது உபாதைக்குள்ளான அவர் தொடர்ந்தும் ஓய்வுபெற்றுவருகிறார்.