by Staff Writer 04-03-2018 | 9:55 PM
COLOMBO (News 1st) - 170 இற்கும் அதிகமான உள்ளூராட்சி மன்றங்களில் தனிக்கட்சி ஒன்றினால் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, உள்ளூராட்சி மன்றங்களின் முதலாவது அமர்வின்போது உறுப்பினர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, தவிசாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு பிரதிநிதிகள் நியமிக்கப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் தெரிவித்தார்.
நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கட்சிகள் அறுதிப் பெரும்பாண்மையைப் பெறாமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் நியூஸ்பெஸ்டுக்குத் தெரிவித்தார்.
https://www.youtube.com/watch?v=-hud-wi3bMw