பாலாவியில் வெடிச்சம்பவம்: ஒருவர் உயிரிழப்பு

பாலாவியில் இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 04-03-2018 | 4:14 PM
COLOMBO (News 1st) - புத்தளம் பாலாவி பகுதியில் இரும்பு பொருட்களை சேகரிக்கும் நிலையத்தில் இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 27 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், விசாரணைகளுக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளரை அழைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக் பேச்சாளர் கூறினார். https://www.youtube.com/watch?v=fj08pc1-rjE