6 கோடி ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சாவுடன் நீர்கொழும்பில் ஒருவர் கைது
by Bella Dalima 03-03-2018 | 8:05 PM
Colombo (News 1st)
சுமார் 6 கோடி ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சாவுடன் நீர்கொழும்பில் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 403 கிலோ கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்தது.
யாழ்ப்பாணத்திலிருந்து வேன் ஒன்றினூடாக கேரளக்கஞ்சா கடத்தப்பட்ட போது, முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடவத்த விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ளவர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.